ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால் நடித்த பாயும் புலி படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்தபடியாக பார்த்திபன்- விஷ்ணு -ஸ்ரீதிவ்யா நடிப்பில் மாவீரன் கிட்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. அதோடு இந்த படத்திற்கும், படத்தில் நடிப்பவர்களுக்கும் தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு கோலிவுட்டில் வெளியாகியுள்ளது.
மேலும், மாவீரன் கிட்டு படத்தை அடுத்து ஜெயம்ரவி நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் கலையரசன் நடிக்கும் படத்தை இயக்குவது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும், இதில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை நிகிலா ஒப்பந்தமாகியிருக்கிறார். கிடாரிக்குப்பிறகு முன்னணி இயக்குனரின் படத்தில்தான் நடிக் கவேண்டும் என்று சில படங்களை தவிர்த்து வந்த நிகிலா, சுசீந்திரன் படம் என்றதும் கேரளாவில இருந்து சென்னை வந்து உடனே அப்படத்தில் கமிட்டாகி விட்டார்.