தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாயா படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.எனவே, இந்த காம்பினேஷனை மனதில் வைத்து அதர்வாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. இந்த செய்திகளை படித்துவிட்டு நயன்தாரா அதர்வாவுக்கு அக்கா மாதிரி இருப்பாரே... அவரா இந்தப் படத்திற்கு கதாநாயகி என்றெல்லாம் சகட்டுமேனிக்கு கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தற்போது இமைக்கா நொடிகள் படத்தில நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அவர் இந்தப்படத்தில் கதாநாயகி இல்லையாம். கௌரவத்தோற்றத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பது வேறு ஒரு நடிகை. இப்போது அந்த நடிகை யார் என்பதையும் முடிவு செய்து விட்டார்கள். தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும நடிகையான ராஷி கண்ணா என்பவர்தான் 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார் என்பது கூடுதல் தகவல்.