விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பாலிவுட்டில் ஒரேகாலக்கட்டத்து நடிகர்கள் சல்மான்கானும், அஜய் தேவ்கனும். இருவரும் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளனர். அதேசமயம் இருவருக்குள்ளும் அவ்வளவாக புரிதல் கிடையாது. இதனிடையே, தற்போது அஜய், சிவாய் படத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளுடன் படத்தின் புரொமோஷன் வேலைகளும் மும்முரமாய் நடந்து வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஜய்யிடம், சல்மான் உடனான நட்பு பற்றி கேட்டபோது அவர் பதிலளித்தாவது...
‛‛பொதுவாக நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட மாட்டேன். நானும் சல்மானும் ஒரேக்காலக்கட்டத்தில் தான் இந்த துறைக்கு வந்தோம். இப்போது வரை சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நாங்கள் இந்த துறையில் நீடிக்கிறோம். என் சமகாலத்து நடிகர்கள் எல்லாம் இன்றைக்கு பார்ட்டி, நண்பர்களுடன் அரட்டை போன்றவற்றில் எல்லாம் ஈடுபடுவது கிடையாது. நான் என் நண்பர்களின் வட்டத்திற்குள் உள்ளேன். அவர் அவருடைய நண்பர் வட்டத்தில் உள்ளார், இருவருக்கும் அதுவே போதும்'' என்று கூறியுள்ளார்.
சிவாய் படம் வருகிற அக்.,28-ம் தேதி தீபாவளி விருந்து படைக்க வருகிறது.