அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
பிரகாஷ்ராஜ் நடித்துள்ள கன்னட படமான இதொல்லே ராமாயணா விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் தொடர்பாக கன்னட தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் பிரகாஷ்ராஜ். அவரை பேட்டி கண்டது ஒரு பெண் நிருபர். சினிமா பற்றிய பேட்டியின் இடையே அந்த பெண் நிருபர் "காவிரி பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?, இதனால் பாதிக்கப்படுவது கர்நாடகமா, தமிழ்நாடா?" என்று கேட்டார். இதனால் பிரகாஷ்ராஜ் ஆத்திரமடைந்தார் அவர் கோபத்துடன் கூறியதாவது:
நான் ஒரு திரைப்பட நடிகன் இதொல்லோ ராமாயணா படத்தை பற்றித்தான் பேச வந்திருக்கிறேன். இது திரைப்படத்தை பற்றிய நிகழ்ச்சி, ஒரு நடிகனாக அந்த படம் பற்றி பேசுகிறேன். காவிரி விவகாரம் என்பது அரசியல் ரீதியாக பெரிய விஷயம். மிகவும் ஆழமான விஷயம். விவசாயிகள் பிரச்சினை வெறும் நீர் மட்டுமல்ல வேறு பல பெரிய பிரச்சினைகளும் இருக்கிறது. இதுபற்றி விரிவாக பேச வேண்டும் இதுபோன்ற சினிமா நிகழ்ச்சியில் காவிரி பிரச்சினை பற்றி வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்காதீர்கள். இந்த பிரச்சினையை கிளப்புவதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. மக்கள் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறார்கள். சினிமா நடிகனிடம் இதைபற்றி கேட்க வேண்டும் என்கிற கெட்டபுத்தி உங்களுக்கு ஏன் வருகிறது. இது நல்ல சமயம் இல்லை. தயவு செய்து பொறுப்புடன் இருங்கள்.
இவ்வாறு கூறிவிட்டு சட்டையில் குத்தப்பட்டிருந்த மைக்கை பிடுங்கி எறிந்து விட்டு வெளியேறினார். வெளியேறும்போது "உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா? வாய்க்கு வந்த விஷயங்களையெல்லாம் கேட்டு ஏன் ஒளிபரப்புகிறீர்கள். எந்த நேரத்தில் என்ன கேட்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லையா? ஏன் இப்படி கேட்கிறீர்கள். நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன். இங்கு இருப்பவனும் நடிகன்தான் அங்கு இருப்பவனும் நடிகன்தான். என் பேட்டியை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்புங்கள்" என்று கூறிவிட்டு கோபத்துடன் கிளம்பிச் சென்றுவிட்டார். இது கன்னட மீடியாக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.