டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் உள்ளதை போல, ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு ரிலீஸ் தினத்தன்று அதிகாலை 2 மணிக்கே ஸ்பெஷல் போடுவது போன்ற வழக்கம் எல்லாம் இதுநாள் வரை மலையாள சினிமாவில் இல்லை.. இத்தனைக்கும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் தீவிரமானவர்கள் தான் என்றாலும் கூட, இன்னும் விடியற்காலையிலேயே சிறப்பு காட்சி பார்க்கும் மனநிலைக்கு ரசிகர்களும் வரவில்லை, அதற்கு தியேட்டர் நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தந்ததும் இல்லை. ஆனால் மோகன்லால் நடிப்பில், வரும் அக்-7ஆம் தேதி வெளியாக இருக்கும் 'புலி முருகன்' படத்திற்காக இந்த மரபுகளை உடைத்தெறிந்துள்ளனர் ரசிகர்களும் தியேட்டர் அதிபர்களும்..
கேரளாவில் சுமார் 200 தியேட்டர்களுக்கு மேல் வெளியாக உள்ள புலி முருகன் படத்திற்கு காலையில் சிறப்புக்காட்சி வேண்டுமென்று ரசிகர்கள் அடம்பிடித்து தற்போது, கிட்டத்தட்ட 130 தியேட்டர்களுக்கு மேல் அதற்கான அனுமதியும் வாங்கிவிட்டார்களாம். அத்தனை சிறப்பு காட்சிகளும் ஹவுஸ்புல்லாகி விட்டனவாம். அதுமட்டுமல்ல, முதல் நாள் மற்ற காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் பல தியேட்டர்களில் விற்றுத்தீர்ந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.. இதன்மூலம், மலையாள திரையுலகில் 'புலி முருகன்' ஒரு புதிய ட்ரெண்டை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.