தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 88-ஆவது பிறந்த நாள் இன்று, (1-10-16) ! இதனை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளில் சிலர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவாஜியின் வீடான 'அன்னை இல்ல'த்திற்கு சென்று அங்குள்ள அவரது புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, பிரகாஷ், உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சிக்கும், சிவாஜியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் நடிகர் சங்கத்தின் தலைவரான நாசரோ... செயலாளர் விஷாலோ... பொருளாளர் கார்த்தியோ செல்லவில்லை. மாறாக, நடிகர் சங்கத்தின் நிர்வாகப்பொறுப்பில் உள்ளவர்களை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டனர்.
சிவாஜியின் பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செய்வதை முக்கிய வேலையாக இவர்கள் நினைக்கவில்லையா? அல்லது வெளியூர் சென்றுவிட்டனாரா? நடிகர் சங்கத்தை உருவாக முக்கிய காரணமாக இருந்த சிவாஜிக்கு இன்றைய நடிகர் சங்க நிர்வாகிகள் கொடுக்கும் மரியாதை இதுதானா?