தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், அடுத்தப்படியாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் எனும் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்தப்படியாக சூர்யாவை இயக்க இருந்தவர், ரஜினியிடமிருந்து அழைப்பு வர ‛கபாலி' கதையை சொல்லி ஓ.கே., வாங்க, மூன்றாவது படத்திலேயே ரஜினியுடன் இணைந்தார். கபாலி படமும் வெளியாகி வசூலை குவித்துவிட்டது. கபாலி கொடுத்த உற்சாகம், மீண்டும் ரஜினியும், ரஞ்சித்தும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ‛மாவீரன் கிட்டு' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் இயக்குநர்கள் ரஞ்சித், சமுத்திரகனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் டிரைலரை ரஞ்சித் வெளியிட்டார்.
விழாவில் பேசிய ரஞ்சித்... ‛‛கபாலி படத்திற்கு பிறகு ரஜினி மீண்டும் அழைத்தார். நான் சொன்ன ஒன்-லைன் ஸ்டோரி அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. உடனே படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார். என் மீதும், என் கதை மீதும் உள்ள நம்பிக்கையில் மீண்டும் இன்னொரு பட வாய்ப்பை கொடுத்துள்ளார் ரஜினி. நிச்சயம் அவரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்'' என்றார்.
மாவீரன் கிட்டு படம் 1987-ம் ஆண்டு, பழனியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா உடன் பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கியுள்ளார், இமான் இசையமைத்துள்ளார்.