ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எவிடே சுப்ரமணியம், பலே பலே மகாதேவோ, ஜென்டில்மேன், மஜ்னு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள நானி தற்போது நேனு லோக்கல் படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்திற்கு பின்னர் நானி, இயக்குனர் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய “நான் ஈ” படத்தில் நாயகனாக நடித்த நானி அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் ஈகா என்ற பெயரிலும் தமிழில் நான் ஈ என்ற பெயரிலும் வெளிவந்த அத்திரைப்படம் ஹிந்தியில் மஹ்ஹி என்ற தலைப்பில் வெளிவந்து வெற்றி பெற்றது. நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுக்களை அள்ளிய சுதீப் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் ராஜமௌலி அப்படத்திற்கு பின்னர் நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என கூறப்படுகின்றது.