விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜான் ஆப்ரஹாம். இதுவரை இந்தி தவிர மற்ற மொழிகளில் நடித்திராத ஜான் ஆப்ரஹாம் அடுத்ததாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்க இருக்கிறாராம். ஒரு நடிகராக ஏற்கனவே ஒரு மலையாள படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஜான் ஆப்ரஹாம் மிக முக்கியமாக குறி வைத்திருப்பது மலையாளப் படங்களை தயாரிப்பதுதானாம். அந்தவகையில், அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம்.
திடீரென ஜான் ஆப்ரஹாமுக்கு மலையாள திரையுலகப்பக்கம் ஆர்வம் திரும்பியது எதனால் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம். காரணம் ஜான் ஆப்ரஹாம் பிறப்பால் ஒரு மலையாளி. ஆம், அவரது தந்தை கேரளா மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்தவர். அவரது தாய் மும்பையைச் சேர்ந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனதால், ஜான் ஆப்ரஹாமின் படிப்பு, சினிமா அனைத்துமே மும்பையிலேயே அமைந்து விட்டது. அவரும் மும்பைவாலாவாகவே மாறிவிட்டார். இருந்தாலும் தந்தையின் பூர்வீகம் கேரளா என்பதால் தன்னை ஒரு மலையாளியாகவும் காண்பித்துக் கொள்ள ஜான் ஆப்ரஹாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிதான் இது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.