ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் நடிக்காத நடிகர்கள் யாரும் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.. அந்தவகையில் மலையாள நடிகர் மம்முட்டியும் இதுவரை சத்யன் அந்திகாடு இயக்கத்தில் 9 படங்களில் நடித்துவிட்டார்.. ஆனால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக கடந்த 19 வருடங்களில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மம்முட்டி நடிக்கவே இல்லை.. இந்த வருடம் மம்முட்டியை இயக்கும் எண்ணத்துடன் தேடிவந்த சத்யனிடம், நாம் அடுத்த வருடம் கூட்டணி சேரலாம்.. அதற்கு முன் என் மகன் துல்கர் சல்மானை வைத்து ஒரு படத்தை இயக்கித்தாருங்கள் என கேட்டாராம்..
அப்படித்தான் இப்போது துல்கரை வைத்து 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் சத்யன் அந்திக்காடு.. ஆனால் ஒருகாலத்தில் இதே மம்முட்டி தான், சத்யன் படத்தில் நடித்துவிட மாட்டோமா என ஏங்கிய சூழலும் இருந்தது.. அப்போது சின்னசின்ன வேடங்களாக தனக்கு தந்த சத்யன் அந்திக்காடுவிடம் தன்னை முழு நீளப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவைக்குமாறு கேட்டார் மம்முட்டி.. சத்யனும் கதை ஒன்றை தயார் செய்து படப்பிடிப்பிற்காக வெளிநாடு கிளம்பும் வேலைகளை துவக்கினாராம்..
ஆனால் சில நாட்கள் கழித்து மம்முட்டி, சத்யனிடம் சென்று, தான் அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றும், தனக்கு பதிலாக வேறு ஹீரோவை ஒப்பந்தம் செய்துகொள்ளும்படியும் கேட்டாராம்.. காரணம் கேட்ட சத்யனிடம், தனது மனைவி சுல்பாத் இரண்டாவது முறையாக பிரசவ நாளை எதிர்நோக்கி உள்ளதாகவும், பிரசவ சமயத்தில் தான் அவருடன் கூடவே இருக்கவேண்டும் என விரும்புவதால் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலாது என்றும் கூறினாராம் மம்முட்டி. சத்யனும் அவரது சூழ்நிலையை புரிந்துகொண்டு வேறு ஹீரோவை வைத்து அந்தப்படத்தை இயக்கினாரம்.. அந்த பிரசவத்தில் மம்முட்டியின் மனைவிக்கு பிறந்த குழந்தைதான் இன்று வாலிபனாக வளர்ந்து முன்னணி நாயகனாகவும் மாறியுள்ள துல்கர் சல்மான்.. அன்று சத்யன் அந்திகாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பை மம்முட்டி யாருக்காக உதறினாரோ, அதே இயக்குனர் தான் இப்போது துல்கர் சல்மானையும் வைத்து படம் இயக்குகிறார்..
இப்போது துல்கர் சல்மானுக்கு தற்போது 30 வயதாகிறது.. என் அனுபவம் தான் உன் வயது என சிலர் சொல்வார்களே அது சத்யன் அந்திக்காடு-துல்கர் விஷயத்தில் உண்மையாகிப்போனது.