டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ படங்களுக்குப்பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கிடுகிடுவென்று முன்னணி நாயகியாகி விட்டார். தமிழைப்போலவே தெலுங்கில் அல்லு அர்ஜூன், நானி போன்ற அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதுதவிர நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா போன்ற நடிகைகளுக்காக கதை பண்ணியிருந்த சில டைரக்டர்களும் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் எகிறி நிற்பதால் அவரிடம் கால்சீட் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டு,
50 வயதை கடந்த சில நடுத்தர ஹீரோக்களுடன் நடிக்குமாறும் கீர்த்தி சுரேஷிடம் கால்சீட் கேட்டு துரத்துகிறார்களாம். ஆனால், அவரோ, வளரத் தொடங்கியிருக்கும்போதே வயதான ஹீரோக்களுடன் நடித்து விட்டால் அதன்பிறகு இளவட்ட நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால், அந்த படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். அதிகப்படியான சம்பளம் தருவதாக ஆசைகாட்டியும் செவிசாய்க்காமல் தனக்கு பிடித்தால் மட்டுமே நடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.