டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவில் சுமூகமான உறவு இல்லை. இருநாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது இந்திய சினிமாவிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக பாலிவுட் சினிமாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாலிவுட் மட்டுமல்ல இந்தியாவிலேயே பாக்., நடிகர்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்., நடிகர்கள் பணியாற்றிய படங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், அஜய் தேவ்கன் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உள்ள ‛சிவாய்' படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சபா ஓமர் எனும் நடிகை பணியாற்றியிருப்பதாக செய்தி பரவியுள்ளது. ஆனால் இதை சிவாய் படக்குழு மறுத்துள்ளது. இதுப்பற்றி அந்த படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சிவாய் படத்தில் எந்த பாகிஸ்தான் நடிகையும் இல்லை, சில வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.