10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சஞ்சய் தத் நடிப்பில் வெளியான படங்கள் முன்னாபாய் எம்பிபிஎஸ் மற்றும் முன்னாபாய் எம்பிபிஎஸ்-2. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக இருந்தது. ஆனால் சஞ்சய் தத் சிறை சென்ற பிரச்னையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அவர் சிறைவாசத்தை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கியுள்ளார் சஞ்சய்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னபாய் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவிடம் முன்னாபாய் 3 பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது.... ‛‛முன்னாபாய் 3 படம் கண்டிப்பாக அடுத்தாண்டு துவங்கும், தற்போது அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து வருகிறது. இது சஞ்சய் தத்தின் கேரியரை இன்னும் உயர்த்தும் என நான் நம்புகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகர், அவரால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்வார்'' என்று கூறியுள்ளார்.