‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவில் புகுந்து காஷ்மீர் மாநிலம் யூரியில் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே புகுந்து பயங்கரவாதிகளை அழித்தது. இதற்காக நாடுமுழுவதும் நமது ராணுவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுஒருபுறம் இருக்க பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்திய திரைப்படங்களில் பணியாற்ற இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் சல்மான் இதை எதிர்ப்பது போன்று, ‛‛பாகிஸ்தான் நடிகர்கள் கலைஞர்கள், பயங்கரவாதிகள் அல்ல, இந்தியாவில் அவர்களை அனுமதித்ததே இந்திய அரசாங்கம் தான்'' என்று கூறியிருந்தார்.
சல்மானின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே சல்மானின் இந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது... நமது ராணுவ வீரர்கள் மீது உண்மையாகவே குண்டுகள் பாய்ந்துள்ளது. இது ஒன்றும் சினிமா அல்ல. அதை முதலில் சல்மான் புரிந்து கொள்ள வேண்டும். நமது வீரர்கள் எல்லையிலிருந்து நம்மை காத்து வருகிறார்கள். பாகிஸ்தானியர்கள் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் நமக்கு கிடையாது. ஆனால் இங்கு தொடர்ந்து நமது எல்லையில் தாக்குதல் நடத்தப்படுவதும், நம்முடைய வீரர்கள் கொல்லப்படுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது. சினிமாவில் சல்மானின் உடல் மீது குண்டு பாய்ந்தால் அவர் எழுந்துவிடுவார். ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. பாகிஸ்தானில் இருந்து நடிகர்களை வரவழைக்கும் அளவுக்கு இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் நிலவுகிறதா? தோனி படம் கூட பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். சல்மான்கானை போன்ற நடிகர்கள் தங்களது படம் பாகிஸ்தானில் நல்ல முறையில் ஓட வேண்டும் என்று கவலைப்படுகிறார்கள். தொடர்ந்து சல்மான் இதுபோன்று பேசினால் அவருடைய படங்களை இங்கு தடை செய்ய நேரிடும். தண்ணீர் பிரச்னைக்கே இருமாநிலங்கள் மோதும் சூழ்நிலை ஏற்படுகையில், இருமாநில நடிகர்கள் போராடுகையில், ஒரு நாட்டிற்காக ஏன் இவரைப்போன்ற நடிகர்கள் முன்வர மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதேப்போன்று சிவசேனா கட்சி விடுத்துள்ள செய்தியில், பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவராக இருந்தால் பேசாமல் சல்மானும் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் என்று கூறியுள்ளது.
தொடர்ந்து சல்மானுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.