டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அதோ இதோ என மலையாள தேசத்து சினிமா ரசிகர்களால் மட்டுமல்லாமல் திரையுலகத்தாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது மகன் ப்ரணவ் மோகன்லாலின் சினிமா பிரவேசத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.. ஆம்.. தனக்கு 'த்ரிஷயம்' என்கிற மாபெரும் ஹிட் மூலம் வெற்றி மகுடம் சூட்டிய ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக மகனை அறிமுகப்படுத்துகிறார்.
மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமா நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது. 'த்ரிஷ்யம்' போல இதுவும் ஒரு த்ரில்லர் படமாக உருவாக்க இருக்கிறதாம். இந்த தகவல்கள் அனைத்தையும் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக இதை உறுதி செய்துள்ளார் மோகன்லால்.
இந்த செய்தி ஒரு பக்கம் சந்தோஷத்தையும் இன்னொரு பக்கம் வியப்பு கலந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் மோகன்லாலின் மகன் ப்ரணவ், இதுநாள் வரை தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் டைரக்சன் தான் தனது இலக்கு என்றும் சொல்லி வந்தார். அதற்கேற்ற மாதிரி கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் ஜீத்து ஜோசப் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியும் வந்தார் ப்ரணவ். அவர் தனியாக படம் இயக்குவதற்கான முழுத்தகுதியும் பெற்றுவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப்பே கூறியிருந்தார்.. இந்தநிலையில் மகனை திடீரென மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலேயே ஹீரோவாக களமிறக்குவது ஆச்சர்யமில்லாமல் வேறென்ன..?