தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்திலிருந்து எத்தனையோ நடிகைகள் வந்தாலும், வந்து கொண்டிருந்தாலும் ‛பூவே பூச்சூடவா' நிதியாவை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். ரஜினி உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், இப்போது தனக்கு ஏற்ற வேடங்களில் நடித்து வருகிறார். நதியாவிடம் உள்ள பெரிய பிளஸை இன்றும் அதே இளமையுடன் இருப்பது தான். தற்போது நதியா, மலையாள இயக்குநர் துளசி தாஸ் இயக்கத்தில் ‛திரைக்கு வராத கதை' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். நதியாவுடன் இனியா, ஈடன், சுபிக்ஷா, ஆர்த்தி, கோவை சரளா என அநேக நடிகைகள் நடித்துள்ளனர். ஹாரர், திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம் இரண்டு மொழியிலும் உருவாகியுள்ளது. இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்று நடிகை நதியா பேசியாதவது... ‛‛முதலில் பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். தற்போதைய சூழலில் ஹிந்தி சினிமாவே நிறைய மாறி வருவது. பெரிய பட்ஜெட் படங்களை விட சின்ன படங்கள் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவிலும் அந்த மாதிரி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னுடைய வாரிசுகள் சனம், ஜன்னா இருவரும் அமெரிக்காவில் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி அமெரிக்கா சென்று வருகிறேன். அதனால் அதிக படங்களில் நடிப்பது கிடையாது.
நல்ல அழுத்தமான கதை இருந்தால் மட்டுமே நடிக்கிறேன். சமீபத்தில் ‛பிங்க்' படம் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் நான் இளமையாக இருப்பதை பற்றி அதிகம் பேசுகிறார்கள். நான் எப்போதும் குறைவாக சாப்பிடுவேன், அதி உடற்பயிற்சி செய்வேன். அது எனக்கு பிடிக்கும், இதுவே என் இளமையின் ரகசியம். நான் தற்போது கிட்டத்தட்ட 50வது படம் பண்ணி கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எப்போதும் நல்ல படங்களில் நான் இருப்பேன். தனுஷ் இயக்கும் பவர்பாண்டி படத்தில் என்னை நடிக்க கேட்டார்கள், ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
இவ்வாறு நதியா கூறினார்.