தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கஞ்சா கருப்பு, அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் புலிமலைப்பட்டியில் நீதிதேவன் என்பவரின் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தி விட்டு ஒரு குழு வந்துள்ளது. அவர்களை வழிமறித்த கஞ்சா கருப்பு உள்ளிட்டோர், அவர்களை மிரட்டி ஆறரை சவரன் நகையை பறித்து விட்டதாகவும், சம்பவம் நடந்த போது கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிதேவன் கீழவளவு போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சிவகங்கை மாவட்ட மதகுபட்டியில் நீதிதேவன் குழுவினர் மீது கஞ்சா கருப்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.