மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. நேற்று பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டனர். இந்தச்சூழலில் சில தினங்களுக்கு முன்னர் பாக்., நடிகரான பவாத்கான், சல்மான் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை நிதின் காக்கர் இயக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் பாகிஸ்தான் நடிகரை தன் படத்தில் நடிக்க வைத்தால் சிக்கல் வரும் என்ற காரணத்தால் சல்மான்கானும், இயக்குநர் நிதினும் அந்த முடிவை மாற்றியுள்ளனர். தற்போதைக்கு அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் பவாத்கான், சல்மான் படத்தில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
இதுப்பற்றி இயக்குநர் நிதின் காக்கர் கூறியிருப்பதாவது... ‛‛என்னுடைய படத்தில் நடிக்க பவாத்கானை கேட்கவேயில்லை, நான் அவரை இயக்குவது தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.