டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் புரட்சிகரமான வேடத்தில் நடித்தவர் பூஜா தேவாரியா. இறைவி படத்தில் பணியாற்றியபோது கார்த்திக் சுப்பாராஜுக்கும் பூஜா தேவாரியாவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டானதாகவும், அதனால் அவரே பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி உட்பட பலருக்கும் பூஜாவை சிபாரிசு செய்கிறார் என்றும் செய்தி வெளியானது.
ஆனால், இறைவி படத்துக்கு முன்பே செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை ஆகிய படங்களில் நடித்தவர்தான் பூஜா தேவாரியா. இறைவி படத்துக்குப் பிறகு தன் நடிப்பில் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெளிவந்ததால் பூஜா தேவாரியா மகிழ்ச்சியில் இருக்கிறார்!
அது மட்டுமல்ல, இப்படங்களில் பூஜா ஏற்றிருந்த கேரக்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களும் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்! தற்போது பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் வல்லவனுக்கும் வல்லவன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் பூஜா தேவாரியா.
இவர், நாடக மேடையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்! எனவே கலை உலகில் பயணித்து வரும் பூஜாவின் திறமையை பாராட்டி அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் பிரபல ஹாலிவுட் நாடக விழாவில வளர்ந்து வரும் கலைஞர் என்கிற விருது வழங்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய நாடக விழாவாக கருதப்படும இந்த விழாவில் மை நேம் ஈஸ் சினிமா மற்றும் வா வன் கோ ஆகிய இரண்டு நாடகங்களையும் பூஜா தேவாரியா அரங்கேற்றி பாராட்டு பெற்றிருக்கிறார்.