‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
விஜயா புரடக்ஷன்ஸ் பேனரில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ள பைரவா படம் பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது. இந்தப்படத்தை தொடர்ந்து தெறி பட இயக்குநரான அட்லி இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் விஜய்!
அட்லியும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணையும் இப்படம் விஜய்யின் 61 ஆவது படம். ராமநாராயணனின் மகனான 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' முரளி ராமசாமி இப்படத்தை தயாரிக்கிறார். விஜய் நடித்து வரும் 'பைரவா'வின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்தப் படத்தை இயக்க அட்லிக்கு 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் விஜய்க்காக இயக்குனர் செல்வராகவன் ஒரு கதையை ரெடி பண்ணி அவரிடம் சொல்லி இருக்கிறார் என்றும் அந்த ஸ்கிரிப்ட்டைக் கேட்ட விஜய்க்கு பிடித்துப்போனதால் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. ஆனால் இது சம்பந்தமான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. என்றாலும் தேனாண்டாள் பிலிம்ஸில் இது பற்றி விளக்கம் கேட்டால், விஜய்யின் அடுத்தப் படம் நாங்கள் தயாரிக்கும் படம்தான் என்று சொல்கின்றனர்.