ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஓஹோவென ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர். ஜனப்ரிய நாயகன் திலீப்பை காதலித்தும் திருமணம் செய்து கொண்டபின் சினிமாவை விட்டு ஒதுங்கியவருக்கு, மீண்டும் சினிமா ஆசை தலைதூக்க, அதுவே அவரது திருமண வாழ்க்கையில் புயலை வீசவும் வைத்துவிட்டது. அவர் மீண்டும் நடிக்க வந்ததாலேயே அவருக்கும் திலீப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்துவரை போய்விட்டது.
தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள மஞ்சு வாரியர் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தான் வீட்டில் இருந்த காலத்திலும், கடந்த இரண்டு வருடங்களிலும் கூட தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதற்கு அழைப்பு வந்தாலும் அவற்றை ஏற்க மறுத்து மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் மஞ்சு வரையார். ஆனால் இப்போது விஜய்யை வைத்து திருமலை படத்தை இயக்கிய ரமணா சொன்ன கதை மஞ்சு வாரியருக்கு பிடித்துவிடவே, தனது பிடிவாதத்தை தளர்த்தி தமிழில் நடிக்க சம்மதித்துவிட்டாராம். இந்தப்படத்தில் மஞ்சு வாரியரின் ஜோடியாக நடிப்பவர் அரவிந்த்சாமி.