ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள மெகாஸ்டார் மம்முட்டிக்கும் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ் கோபிக்கும் நீண்ட நாட்களாகவே ஒரு பனிப்போர் இருந்து வருவதாகவே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மாதிரி ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லை என்றும், பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதில்லை என்பதும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இது இப்போதல்ல பல வருடங்களுக்கு முன்பே மனககசப்பால் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டு வந்தது. இத்தனைக்கும் இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த 2012ஆம் வருடம் இருவரும் இணைந்து 'தி கிங் அன்ட் கமிஷனர்' படத்தில் கூட ஒன்றாக நடித்தனர். இருந்தாலும் அவர்களது நிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றும் படத்திற்காக மட்டுமே ஒன்று சேர்ந்து நடித்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் சமீபத்தில் நடிகை மேனகாவின் மகளும் கீர்த்தி சுரேஷின் அக்காவுமான ரேவதி சுரேஷின் திருமண வைபவம் இருவரின் கோப தாபங்களை மறக்க செய்து மீண்டும் நட்பை துளிர்விட செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கலந்துகொண்ட மம்முட்டியும் சுரேஷ்கோபியும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர். அதுமட்டுமல்ல நீண்ட நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனராம். இதைப்பார்த்த மலையாள திரையுலக வி.ஐ.பிக்கள் அப்பாடா 'ஒரு பனிப்போர் இப்போதாவது முடிவுக்கு வந்ததே' என மகிழ்ச்சியடைந்தார்களாம்.