டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரதாப் போத்தன் நல்ல நடிகர். ஒரு காலத்தில் நல்ல இயக்குனரும் கூட. ஆனால் அவரது வாய் துடுக்குதான் அவருக்கு பலவகையிலும் தேவையில்லாத சிக்கலை இழுத்துக்கொண்டு வந்து விடுகிறது. கடந்த வருடம் முழுவதும் ஜெயராமுடன் சண்டையிட்டுக்கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். காரணம் அவரது மகன் காளிதாசை தான் அறிமுகப்படுத்துவதற்கு முதலில் சம்மதம் சொன்ன ஜெயராம், அதன்பின் அதை கண்டுகொள்ளாமல் விட்டது தான். அந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தார்.
அந்தப்படத்தின் கதையை 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனரான அஞ்சலி மேனன் எழுதுவார் என்றும் அறிவித்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப்படம் ட்ராப் ஆனது. பிரதாப் போத்தனோ, அஞ்சலி மேனன் எழுதிய திரைக்கதை ரொம்பவே சுமாராக இருந்தது என குற்றம் சாட்டினார். ஆனால் அதற்கு அஞ்சலி மேனன் அப்போது பெரிய பதிலடி ஒன்றும் தரவில்லை. ஆனால் இப்போது அதே படத்தை அஞ்சலி மேனன் தானே துல்கர் சல்மானை வைத்து இயக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே தனக்கு 'உஸ்தாத் ஹோட்டல்' மற்றும் 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் வெற்றிகளை தந்தவர் அஞ்சலி மேனன் என்பதால் இதற்கு துல்கர் சல்மானும் ஓக்கே சொல்லிவிட்டாராம்.. இதை கேள்விப்பட்ட பிரதாப் போத்தன் 'அடடா வட போச்சே' என வடிவேலு பாணியில் அப்செட் ஆகியுள்ளாராம்.