டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மம்முட்டி இத்தனை வயதானாலும் இளமை தோற்றத்துடன் வலம் வருவதை சினிமாவிலும் நேரிலும் அடிக்கடி காணமுடிகிறது. அதேசமயம் அவரது படங்களில் ஆக்சன் காட்சிகளை கவனித்து பார்த்தால் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பது நன்றாகவே தெரியும். அதற்காக தனக்கு பதிலாக டூப் போடவும் மாட்டார். அதேசமயம் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை மாற்றி அமைக்க சொல்லிவிடுவார். ஆனால் மோகன்லால் அப்படியல்ல.
சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எந்த ரிஸ்க்கும் எடுப்பார். அவரை வைத்து சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் இயக்குனர்கள் அனைவருமே சண்டைக்காட்சிகளுக்கு ஒத்துழைக்கும் மோகன்லாலின் உடல்வாகு பற்றி புகழ்ந்தே வருகின்றனர். அந்தவகையில் தற்போது தான் நடித்துள்ள புலி முருகன் படத்திலும் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார்..
ஆனால் இந்தப்படத்தை துவங்குவதற்கு முன்னரே இயக்குனர் வைசாக் தனது நலம் விரும்பியான மம்முட்டியிடம் இந்தப்படத்தின் கதையை கூறியுள்ளார். அதைக்கேட்ட மம்முட்டி படத்தில் ரிஸ்க்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் மோகன்லாலை வைத்து படமாக்கும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினாராம். மேலும் ஒவ்வொரு முறையும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவும் என்று கூறினாராம். அதுமட்டுமல்ல, ரிலாக்ஸாக நடிப்பதை விட்டுவிட்டு இந்த வயதிலும் மோகன்லால் ஏன் ரிஸ்க் எடுத்து தன்னை வருத்திக்கொள்கிறார் என இயக்குனர் வைசாக்கிடமும் வருத்தப்பட்டாராம் மம்முட்டி.