ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் தன்னுடைய அடுத்த படத்தை விஜய் முடிவு செய்வது வழக்கம். அப்படித்தான் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ள சமயத்தில் அட்லீ இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை அவர் முடிவு செய்துவிட்டார். இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் கதையை அட்லீ எப்போதோ தயார் செய்து முடித்துவிட்டாராம்.
'தெறி' படத்தில் அட்லீயுடன் பணிபுரிந்த போது விஜய்க்கு உகந்த விதத்தில் அட்லீ நடந்து கொண்டதுதான் மீண்டும் அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்துள்ளார் என்கிறார்கள். அதோடு 'தெறி' படமும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிய அட்லீக்கு அடுத்த வாய்ப்பு அம்சமாக அமைந்துவிட்டது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் சூழ்நிலையில் அவர் இல்லையென்றால் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்றும் ஆலோசனை நடந்து வருகிறதாம். அனேகமாக மும்பை ஹீரோயின் யாருக்காவது வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு தகவல் உள்ளது.
'தெறி' படத்தை விடவும் படம் பக்கா ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளாராம். பைரவா படம் அக்டோபர் மாத மத்தியில் முடிந்துவிடுமாம். அதன் பின் படத்தின் டப்பிங் மற்ற வேலைகள் நவம்பர் வரை போக வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை குடும்பத்தினருடன் விஜய் கொண்டாட முடிவெடுத்துள்ளாராம். அதனால் ஜனவரி 2017ல் விஜய் 61 படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது.