ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் மாநிலம் யூரியில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து பாலிவுட்டில் உள்ள பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் கரண் ஜோகர் இயக்கியுள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தில் பாக்., நடிகர் பவாத்கான் நடித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கரண் ஜோகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எம்என்எஸ்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கரண் ஜோகருக்கு நடிகர் சல்மான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். சல்மான்கான், ராஜ்தாக்ரேயிடம் பேசி, கரண் ஜோகருக்கும், ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதேப்போன்று பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.