ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷாலும், வரலட்சுமியும் தீவிரமாக காதலிப்பது ஊரறிந்த ரகசியம், இருவரும் விரைவில் திருமணமும் செய்து கொள்ளப்போகிறார்கள். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது விஷாலுடன் களத்தில் இறங்கி பணியாற்றினார் வரலட்சுமி, விஷாலின் பிறந்த நாளில் அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்து காதலை உறுதிப்படுத்தினார். ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்து வந்த விஷால் சமீபத்தில் ஒரு பேட்டியில் "நீங்கள் நினைக்கும் லட்சுமிகரமான பெண்ணைத்தான் திருமணம் செய்யப் போகிறேன்" என்றார்.
இந்த நிலையில் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை நேற்று வரலட்சுமி தனது டுவிட்டரில் "சேர்ந்திருப்பவர்கள் பிரிவதை விட கொடுமையானது எதுவும் இருக்க முடியாது. ஒரு நபர் தனது 7 ஆண்டுகால உறவை தனது மேலாளர் மூலமாக முறித்துக் கொண்டார். உண்மையான காதல் எங்கே?" என்று எழுதியிருந்தார்.
விஷாலின் மானேஜருக்கும், வரட்சுமிக்கு அவ்வளவாக ஒத்துப் போகாது என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியும். இதனால் வரலட்சுமி, விஷால் காதல் முறிந்துவிட்டதாக எல்லோரும் முடிவு செய்தார்கள். ஆனால் தனது டுவிட்டர் பற்றி கருத்து தெரிவித்துள்ள வரலட்சுமி "அந்த டுவிட்டர் வாசகம் என்னை பற்றியதல்ல. அதற்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை" என்று பல்டி அடித்துள்ளார். இருவருக்கும் இடையில் விரிசல் விழுந்திருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.