விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
ஹிந்தி திரையுலகில் தற்போது வரை முன்னணியில் இருக்கும் நடிகர்களில் அக்ஷய் குமாரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் அக்ஷய் நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இதைத்தொடர்ந்து அக்ஷய் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். தற்போது அக்ஷய் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் நடிகர் அக்ஷய், இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் ‛பைவ்' படத்தில் நடிப்பதாகவும், 2018 ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் தற்போது ‛பைவ்' படத்தில் அக்ஷய் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஓமங் குமார், அக்ஷயிடம் ‛பைவ்' படத்தில் நடிக்க கேட்டதும், அக்ஷய் நடிக்க ஒப்புக் கொண்டதும் உண்மை தானாம். ஆனால் அக்ஷ்ய் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அக்ஷய், தற்போது ஜாலி எல்.எல்.பி -2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் அடுத்து அடுத்து இரண்டு படங்களிலும், அதன்பின் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒருபடமும் நடிக்க உள்ளார். ஆக இந்தவருடம் முழுவதும் அக்ஷ்ய் பிஸியாக இருப்பதால் தான் ‛பைவ்' படத்தில் நடிக்கவில்லை என தெரிகிறது.