தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரம்மோற்சவம் படத்தின் தோல்விக்கு பின்னர் டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிக்கின்றாராம். வாஸ்கோடகாமா என தற்செயலாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கின்றது. இப்படத்திற்கு தலைப்பு தேடும் பணியில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளாராம். சிவா, அபிமன்யு போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் திரைக்கு வரவுள்ளதால் பொதுவான தலைப்பை தேடி வருகின்றனர். சென்னையில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது ஐதராபாத் சென்றுள்ளது