'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சைத்தான். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசரின் பின்னணி இசையாக தைத்ரீய உபநிஷத வேத மந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியே இசை அமைத்துள்ளார். இதுபற்றி இந்து வேத அறிஞர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
“மித்ரன் நமக்கு நன்மை செய்யட்டும், வருணன் நமக்கு நன்மை செய்யட்டும், அர்யமான் நமக்கு நன்மை செய்யட்டும், இந்திரனும் ப்ரஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்யட்டும், எங்கும் நிறைந்தவராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும். பிரம்மனை (பரப்பொருளை) வணங்குகிறேன், நீயே கண்கண்ட தெய்வமாக இருக்கிறாய். கண்கண்ட தெய்வம் என்று போற்றுகிறேன்” என்பது சைத்தான் படத்தின் டீசரில் பயன்படுத்தப்பட்டுள்ள வேத மந்திரத்தின் பொருள்.
அந்த மந்திரத்தை எந்த அளவுக்கு கெடுக்க முடியோமோ அந்த அளவுக்கு கெடுத்து அந்த டீசர் காட்சிகளின் இசைக்கேற்ப பின்னால் இழைய விடுகிறார் அந்த படத்தின் இசை அமைப்பாளர். அந்த மந்திரத்தில் கடைசியில் வரும் "சன்னோ விஷ்ணு ருருக்ரம:" என்ற மந்திரத்தை "விஷ்ணு சைதானே" என்று ஒலிக்கும்படி செய்திருக்கிறார். தயவு செய்து இந்த புனிதமான வேத மந்திரங்களை இப்படி தரக்குறைவாக உபயோக படுத்துவதை நிறுத்துங்கள்.
இவ்வாறு இந்து வேத விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிச்சைக்காரன் படத்தில் "கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்" என்ற வரிகள் பெரும் பிரச்சினையை கிளப்பியது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை கொண்ட வரிகள் என்று பிரச்சினை எழுந்தது. பின்னர் அந்த வரியை விஜய் ஆண்டனி நீக்கி பகிரங்க மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.