'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விவசாய குடும்பத்தில் பிறந்து பத்திரிக்கையாளராகி, பின்பு பாடலாசிரியராகி குறைந்த காலத்தில், குறைந்த பாடல்களை எழுதி நிறைய வெற்றிகளை கொடுத்த கவிஞன் அண்ணாமலை. காலம் எழுதிய சோகப்பாட்டில் கரைந்து போனார் இன்று. திருமணமான 19 வருடத்திற்கு பிறகு ஒரு வாரிசை கண்டார். 50 வயதில் தன் இறுதிபாடலை எழுதிவிட்டு சென்று விட்டார். அவரது நினைவலைகள் சில...
அண்ணாமலை, பிறந்த ஊர் திருவண்ணாமலை. இவரது தாய்வழித் தாத்தாவின் குடும்பம் அங்கிருந்ததால், அவ்வூரின் அரசு மருத்துவமனையில் பிறத்தார். திருவண்ணாமலையில் பிறந்ததாலேய அண்ணாமலை என்று பெயர் வைத்தார் தாத்தா. சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள 'கீழப்பட்டு' என்கிற கிராமம். ஐந்தாம் வகுப்பு வரை அங்கே படித்தார். பிறகு, திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, தாத்தா வீட்டில் தங்கிப் படித்தார். மேல்நிலைப் படிப்பை சங்கராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முடித்தார்.
பள்ளியில் கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் பலவற்றில் கலந்துகொண்டு, பரிசுகள் வாங்கியுள்ளார். பள்ளி நாட்களில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை உயிராக நேசித்தார். எனவே, அவர் படித்த சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தால், அதே கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். 'சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து அதே கல்லூரியில் எம்.ஃபில். பட்டமும் பெற்றார். தற்போது, சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் (பி.ஹெச்டி) பட்ட ஆய்வு செய்து வந்தார். முனைவர் ஆகும் முன்னே மரணம் முந்திக் கொண்டது.
பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்தில், 'சுரேசன்' என்கிற புனைப்பெயரில் தான் இவர் பிரபலம். அந்தப் பெயரில் கவிதை, கதை, கட்டுரைகளும் எழுதி வந்தார். ஒரு இலக்கிய இதழில் 'வேங்கையின் சபதம்' என்ற பெயரில், ஈழ மன்னன் எல்லாளச் சோழன் பற்றிய வரலாற்று குறுநாவல் ஒன்றும் வெளியானது. அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகள் வாங்கினார்.
அப்போது, முன்னாள் பச்சையப்பன் கல்லூரி மாணவரான இயக்குனர் செல்வாவின் தொடர்பு ஏற்பட்டது. அவர் இயக்கிய 'சித்திரப் பாவை' என்ற தொலைக்காட்சித் தொடரில் முதன் முதலில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
'எட்டாத சோலையானது, என் தோளில் மாலையானது... விண்மீன்கள் கூட்டமானது, என்வாசல் தோட்டமானது' என்று இவர் எழுதிய ஒரு மகிழ்ச்சியான சூழலுக்கான பாடல் வரிகளை, பாடகர் மனோ பாட... நடிகர் சிவகுமார் நடித்த அந்தத் தொடரில் இடம்பெற்றது.அதைத் தொடர்ந்து, நீலா மாலா, கோகுலம், நரசி, அஸ்திவாரம், செல்லப்பிள்ளை, புதுயுகம், மைதிலி, தங்கம் உட்பட 15 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். அதோடு, பக்தி மற்றும் தனிப்பட்ட 25 இசைத் தொகுப்புகளுக்கும் சேர்த்து 200 பாடல்கள் எழுதியுள்ளார்.
அண்ணாலையின் முதல் திரைப்பாடல், நாஞ்சில் கென்னடி இயக்கத்தில் 1992ல் வெளிவந்த 'புதுவயல்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. மனோ, சித்ரா ஆகியோர் பாடினர். இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம், 'கும்மாளம்'. அதில் 'திம்சு கட்ட அடடா திம்சு கட்ட' உட்பட மூன்று பாடல்கள் எழுதியதில் தொடங்கியது, இவரது திரைப்பாடல் பயணம். அதைத்தொடர்ந்து, 'சேனா, ஸ்டூடன்ட் நம்பர் ஒன், மச்சி, ஜங்ஷன்' போன்ற போன்ற சில படங்களுக்கு பாடல் எழுதி வந்தார்.
'வேட்டைக்காரன்' படத்தில் வந்த 'என் உச்சி மண்டையில சுர்ருங்குது' பாடல்தான் இவரைப் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து 50 படங்களுக்கு எழுதி இருக்கிறார். 20 படங்களுக்கு எழுதி வந்தார். இதுவரை வெளிவந்த இவரது 60 திரைப்பாடல்களில் 30 பாடல்கள் தேவா, டி. இமான், மணிஷர்மா, விஜய் ஆண்டனி, தமன், வெங்கடேஷ், மரகதமணி, ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், சுந்தர் சி.பாபு, பரணி, ஏ.ஆர்.ரைஹானா, காந்திதாசன், சரோஜ்பாபு, ஸ்ரீசாய்.வி., பத்மன், ஆல்ட்ரின், கே.பாரதி உட்பட 50 இசையமைப்பாளர்களிடம் பாடல்கள் எழுதியுள்ளார்.
இதுவரை தான் எழுதிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இரண்டு நூல்களாக வெளியிட திட்மிட்டு பணிகளை செய்து கொண்டிருந்தார். அதற்குள் காலம் அவரையே இறங்கற்பா ஆக்கிவிட்டது.