ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்.ஜே.மீடியாக கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் ஆங்கில படம். குமரேஷ் குமார் இயக்கி உள்ளார். ராம்கி, சஞ்சீவ், புதுமுகம் ஸ்ரீஜா, மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து மதுமிதா நடித்துள்ளனர், எம்.சி.ரிக்கோ இசை அமைத்துள்ளார், சாய் சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் படத்துக்கு ஆங்கில படம் என்று பெயர் வைத்தது ஏன் என்று இயக்குனர் குமரேஷ் குமார் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு ஆனா நீ புதுஇயக்குனர் சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர் அனால் இப்போது ராம்கி,சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி.உண்மையிலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது.மேலும் சந்தோஷப்படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.படம் விரைவில் திரைக்கு வரும், நிச்சயம் நீங்கள் எல்லோரும் திருப்தியான படமென்று சொல்வீர்கள் என்கிறார் குமரேஷ் குமார்.