கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
இப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்கள் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று என படங்களில் பார்த்து பார்த்து நடிக்கிறார்கள்.. அப்படியும் கூட வெவ்வேறு சமயங்களில் அவர்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அவர்களது பட தயாரிப்பாளர்களுக்குள் ஒரு போட்டியை உண்டாக்கிவிட்டது போல தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.. இது இப்போது மட்டுமல்ல, இப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலரும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் தவறாமல் சந்தித்த சங்கடம் தான் இது. மெகாஸ்டார் மம்முட்டியின் சினிமா வாழ்க்கையிலும் பலமுறை இப்படி நிகழ்ந்தது உண்டு என்றாலும் அதில் இயக்குனர் பாலுமகேந்திரா சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்று ரொம்பவே சுவாரஸ்யமானது..
1985ல் பிரபல இயக்குனர் ஜோஷியின் டைரக்சனில் 'நிறக்கூட்டு' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானர் மம்முட்டி. இந்தப்படத்திற்காக ஒட்டவெட்டிய முடியும், தாடியுமாக மம்முட்டியின் கெட்டப்பை உருமாற்றினார் ஜோஷி.. அதே சமயத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 'யாத்ரா' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் மம்முட்டி.. ஜோஷி படத்திற்காக மம்முட்டி வைத்திருந்த கெட்டப்பை பார்த்ததும் பாலுமகேந்திராவுக்கு பிடித்துப்போய் விட்டது. அதனால் அதே கெட்டப்பையே தனது படத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து ஷூடின்கையும் ஆரம்பித்துவிட்டார்... இந்த விஷயத்தை இயக்குனர் ஜோஷியிடம் சொன்னார் மம்முட்டி..
இரண்டு இயக்குனர்கள் இயக்குவதும் ஒரே கதை என்றால்கூட ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்பது கஷ்டமான விஷயம்.. அப்படி இருக்க தனது பட கேரக்டருக்கான கெட்டப்பில் இன்னொரு இயக்குனர் அதே நடிகரை நடிக்கவைப்பதை எப்படி தவறென்று சொல்லமுடியும்.. ஆனால் தான் உருவாக்கிய கெட்டப் தனது படம் மூலம் வெளியானால் தான் அதற்கு பலன் இருக்கும்.. இல்லையென்றால் தான் இன்னொரு படத்தில் இருந்து காப்பி அடித்ததாக ஆகிவிடுமே.. இதற்கு என்ன தீர்வு என் யோசித்த ஜோஷி, பாலுமகேந்திராவை விட தனது பட ஷூட்டிங்கை வெகுவிரைவில் முடித்து படத்தை ரிலீசுக்கு தயாராக்கினார். அந்தவகையில் பாலுமகேந்திரா படம் 1985 செப்-20ல் ரிலீசுக்கு தேதி குறிக்கப்பட, தனது படத்தை 8 நாட்கள் முன்னதாக செப்-12 அன்றே ரிலீஸ் செய்தார் ஜோஷி..