ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கௌதம் மேனன் தமிழ் சேனல்களுக்கு அவ்வளவாக இண்டர்வியூ கொடுப்பதில்லை என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் சமீபத்தில் வந்துசென்ற ஓணம் பண்டிகையின்போது மலையாள சேனல் ஒன்றிற்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்திருக்கிறார்.. அதைவிட சுவாரஸ்யம் அவரை பேட்டி எடுத்தது, அவர் இயக்கிவரும் 'அச்சம் என்பது மடமையடா' ஹீரோயினான மஞ்சிமா மோகன் தான். பேட்டி மலையாள சேனலில் தான் என்றாலும் கௌதம் மேனன் பேசியதென்னவோ முக்கால்வாசி நேரம் ஆங்கிலத்தில் தான்.
அப்போது கௌதம் மேனனிடம் சிம்பு, தனுஷ் இருவரையும் வைத்து படம் இயக்கி வருகிறீர்களே உங்களது அனுபவத்தில் இருவரைப்பற்றிய மதிப்பீடு என்ன மஞ்சிமா கேட்டார்.. அதற்கு பதில் சொன்ன கௌதம் மேனன், “இரண்டு பேருமே 'ரா'வானவர்கள்.. அவர்களை நமக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.. சினிமாவை நன்றாக கற்று வைத்திருப்பவர்கள்.. இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் தனுஷ் சொன்ன நேரத்திற்கு வருவார்.. சிம்பு சொன்ன நேரத்திற்கு வரமாட்டார்.. அவ்வளவுதான்” என போகிற போக்கில் சிம்பு மீதான அதனது கோபத்தை வெளிக்காட்டி விட்டார்.