கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் தேவி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படத்தை இயக்கியுள்ளார் விஜய். பிரபுதேவா, தமன்னா, சோனுசூட், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 7-ந்தேதி மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. ஏற்கனவே தெலுங்கு, இந்தி பதிப்புகளின் பப்ளிசிட்டிகளை செய்து வந்தவர்கள், நேற்று தமிழ் பதிப்பின் ஆடியோவை வெளியிட்டு, மீடியாக்களை சந்தித்தனர்.
அப்போது தேவி படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான பிரபுதேவா பேசுகையில்,இந்த படத்துல முதல்ல நடிக்கும்போது நல்லா நடிக்கனும், சூப்பரா நடிக்கனும் என்ற அந்த மாதிரி யோசனையே எனக்கு இல்லை. அது செகண்டுதான். முதல்ல டைரக்டர் விஜய், நாயகி தமன்னா, காமெடியன் ஆர்.ஜே.பாலாஜி இவங்ககிட்டெல்லாம் நல்ல பெயர் எடுக்கனும்னுதான் ஆசைப்பட்டேன். இது மட்டும்தான் என் மைண்டில இருந்தது. சாமிகிட்டகூட, அப்பா சாமி என்னை எதுவும் பேச வச்சிராதே. அவங்க சொல்றதை மட்டும் நான் செய்தா போதும் அப்படின்னு கும்பிட்டுடுதான் நடிக்க வந்தேன். எந்த வேலையும் செய்யக்கூடாது. போனதும் நடிக்க சொல்றாங்களா நடி, நடிச்சிட்டு அவுட்டு போ இப்படித்தான் நினைச்சுக்கிட்டே ஸ்பாட்டுக்குள்ள போனேன்.
இவளோ வருசம் கழிச்சி நடிக்கிறீங்களேன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. முதல்ல நான் டான்சரா வந்தேன், அப்புறம் மாஸ்டரா வந்தேன், நடிகரானேன், தமிழ், தெலுங்கிற்கு அப்புறம் இந்திக்கு போனேன். இப்ப பதினோறு வருசம் கழிச்சி திரும்பவும் தமிழுக்கு வந்திருக்கிறேன். இதுவும் டெபு மாதிரிதான் இருக்கு. எப்பவுமே டெபுலே இருக்கேன் நான்.
எங்கிட்ட பேசுற பத்திரிகைகாரங்க தொடர்ந்து நீங்க நடிக்கனும்ங்கிறாங்க. உங்களுக்கு சந்தோசம்னா நான் நடிப்பேன். இவ்ளோ அன்பு வச்சிருக்கீங்கள்ள அதுக்காகத்தான். அப்புறம் ஏ.எல்.விஜய்ய நல்லா தெரியாது. ரொம்ப பழக்கமில்ல. அவர் ரொம்ப பொறுமைசாலி, ஜென்டில்மேன். அவர் எல்லோர்கிட்டயும் மென்மையா பேசுவாரு. சின்ன ஆர்ட்டிஸ்டென்றாலும் பொறுமையாக சொல்லி வேலை வாங்குவார். அந்த பொறுமையை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண் டேன். நைஸ் மேன். என்னை, ஹீரோயினி என பலரை அவர் சமாளிக்கனும்.
ஆர்.ஜே.பாலாஜியோட நடிச்சதும் சந்தோசம். எப்போதுமே பேசிக்கிட்டே இருப்பார். ஆனால் டைரக்டர் விஜய் பேசவே மாட்டார். தமன்னாவையும் முதல்ல எனக்கு தெரியாது. நான் பிளைட்டுல ஏறின அப்ப ஒரு பாரினர் வந்து எனக்கு கைகாட்டினாங்க. நானும் கை காட்டினேன். அப்போது என் ப்ரண்டிடம் பார்த்தியாடா எனக்கு பாரின்ல எல்லாம் பேன் இருக்காங்க என்றேன். அப்போது அவர், அது தமன்னாடா என்றார். இப்படியொரு பாரின் கேர்ள வில்லேஜ் கேர்ளா மாத்தப்போறேன்னு சொன்னார் விஜய். சொல்றது ஈஸி. இதெல்லாம் நடக்கிற காரியமா என்றேன். இல்லை சார் பண்ணலாம் என்றார். நான் நம்பவே இல்லை.
ஆனால் மாற்றிக்காட்டினர். 2 மணி நேரம் மேக்கப் போட்டு, பக்கா கிராமத்து பெண்ணாக தமன்னாவை மாற்றினார். சீன் பண்ணும்போது இன்வால்வ் பண்ணினார் தமன்னா. 3 மொழி படம். கேரவனுக்குள் இருந்தும் அழுகிறார் தமன்னா. அப்படி ஈடுபாட்டோடு நடித்தார். டான்ஸ்லகூட இரண்டு நாள் ரிகர் சலுக்கு வந்த தமன்னாவை மூனாவது நாள் ஆளை காணோம். போன் பண்ணினா, கால் கொஞ்சம் வலி என்றார். அப்புறம் இடுப்பு வலி என்றார். அப்புறம் கழுத்து வலி என்றார். அடுத்து உடம்பே வலிக்கு சார். ஒரே ஜூரமா இருக்கு ப்ளீஸ் விட்ருங்க சார் நாளைக்கு வர்றேன் என்றார். 15 நாள் ரிகர்சல் எடுத்து ஒரு பாடலில் அதிரடியான நடனமாடினார். கேமராமேன் மனுஷ் இந்த தேவி படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் சூப்பராக பண்ணியிருக்கிறார்.
பிரபுதேவா ஸ்டுடியோஸ்ல சில சமயங்களில்ன்னு ஒரு படம் பண்ணியிருக்கோம். பிரியதர்ஷன் இயக்கியிருக்காரு. கோல்டன் க்ளோவ் அவார்டுக்கு போயிருக்கு.அதுக்கு அப்புறம் போகன் என்றொரு படம் பண்றோம். நான் படத்தை பார்த் தேன். பிரமாதமா இருக்கு. அதையடுத்து ஜெயம் ரவிக்கிட்ட சொன்னேன். தனி ஒருவனுக்கு அப்புறம் இது செம படமா இருக்கும் என்றேன். அரவிந்த்சாமி-ஹன்சிகா அனைவருமே ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. அப்புறம் வினோதன் பண்றோம். அதுக்கு அப்புறம் தேவி. பார்த்தா 6 படம் மாதிரி இருக்கு. எங்களுக்கு கஷ்டமா இருக்கு. டைரக்டருக்கு பெண்டு நிமிர்ந்திருச்சி. இனிமே 3 மொழியிலலாம் படம் பண்ண மாட்டேன் என்கிறார் விஜய். ஆனா பண்ணுவாரு. இதுக்கு அப்புறமா பிரபுதேவா ஸ்டுடியோஸ்ல இன்னொரு படம் நாங்க பண்ணப்போறோம். அதைப்பத்தி அப்புறமா சொல்றேன் என்றார் பிரபுதேவா.