ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யாமிருக்க பயமே, காக்கா முட்டை, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், வேதாளம், மாப்ள சிங்கம், முத்தின கத்திரிக்கா, ஜாக்சன் துரை, ஆண்டவன் கட்டளை என பல படங்களில் காமெடியனாக நடித்தவர் யோகி பாபு. தற்போது பத்து படங்கள் வரை பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், சமீபத்தில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் விஜயசேதுபதியுடன் பயணிக்கும் நண்பர் வேடத்தில் நடித் துள்ளார். இதில் யோகிபாபுவின் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியுள்ளது.
இதுபற்றி யோகிபாபு கூறுகையில், விஜயசேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்து வந்தது. அந்த ஆசையை ஆண்டவன் கட்டளை படம் நிறைவேற்றியுள்ளது. ரொம்ப அற்புதமான நடிகர் அவர். காரணம், உடன் நடிப்பவர்களும் நன்றாக ஸ்கோர் பண்ண வேண்டும் என்று நினைப்பார். அதனால் தான் மட்டும் அதிகமாக நடிக்க வேண்டும் என்பதில்லாமல் மற்றவர்களும் நடிக்க வேண்டும் என்ற ஸ்பேஸ் கொடுப்பார். அப்படி அவர் கொடுத்ததினால்தான் ஆண்டவன் கட்டளை படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது. அதனால், விஜய்சேதுபதியுடன் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் யோகிபாபு.