Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடலாசிரியர் அண்ணாமலை திடீர் மரணம்!

27 செப், 2016 - 23:31 IST
எழுத்தின் அளவு:
Lyricist-Annamalai-passes-away

200 பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டையிலே, வேலாயுதம் படத்தில் ரத்தத்தின் ரத்தமே, சகுனி படத்தில் போட்டது பத்தல, நினைத்தாலே இனிக்கும் படத்தில் பன்னாரஸ் பட்டுக்கட்டி, ஈட்டியில் ஒரு துளி மழையினில் என 200 பாடல்களுக்கு மேல் எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.


விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள கீழப்பட்டு என்ற ஊரில் பிறந்தவர் அண்ணாமலை. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்ற அண்ணாமலை, பத்திரிகை ஒன்றில் உதவி ஆசிரியராக பல ஆண்டுகளாக பணியற்றியவர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பாடல் எழுதும் திறமை பெற்ற அண்ணாமலை சில தொடர்களுக்கு பாடல் எழுதினார்.


பின்னர் கும்மாளம் என்ற படத்தில் திம்சுகட்ட... என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர், உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியவர், நினைத்தாலே இனிக்கும் படத்தில் பணாரஸ் பட்டு கட்டி பாட்டு மூலம் பிரபலமானார். தொடர்ந்து விஜய்யின் வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதினார். இவரது பாடலின் ஸ்பெஷலே குத்துப்பாட்டு தான்.


கடந்த சில ஆண்டுகளாக முழுநேர பாடலராசிரியராக சினிமாவில் பாடல்கள் எழுதி வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் நிறைய பாடல்களை எழுதியுள்ளார்.


இந்நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் மனைவியும், குழந்தையும் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அண்ணாமலை மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சென்னை கேஎம்சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பில் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். நாளை காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.


அண்ணாமலைக்கு திருமணமாகி 19 வருடங்களுக்கு பிறகு மவுனா என்ற மகள் பிறந்தார். இப்போது அவருக்கு 4 வயதாகிறது.


சமீபத்தில் தான் கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்தார், அந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு பாடலாசிரியர் மரணம் அடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in