தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
200 பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டையிலே, வேலாயுதம் படத்தில் ரத்தத்தின் ரத்தமே, சகுனி படத்தில் போட்டது பத்தல, நினைத்தாலே இனிக்கும் படத்தில் பன்னாரஸ் பட்டுக்கட்டி, ஈட்டியில் ஒரு துளி மழையினில் என 200 பாடல்களுக்கு மேல் எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள கீழப்பட்டு என்ற ஊரில் பிறந்தவர் அண்ணாமலை. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்ற அண்ணாமலை, பத்திரிகை ஒன்றில் உதவி ஆசிரியராக பல ஆண்டுகளாக பணியற்றியவர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பாடல் எழுதும் திறமை பெற்ற அண்ணாமலை சில தொடர்களுக்கு பாடல் எழுதினார்.
பின்னர் கும்மாளம் என்ற படத்தில் திம்சுகட்ட... என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர், உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியவர், நினைத்தாலே இனிக்கும் படத்தில் பணாரஸ் பட்டு கட்டி பாட்டு மூலம் பிரபலமானார். தொடர்ந்து விஜய்யின் வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதினார். இவரது பாடலின் ஸ்பெஷலே குத்துப்பாட்டு தான்.
கடந்த சில ஆண்டுகளாக முழுநேர பாடலராசிரியராக சினிமாவில் பாடல்கள் எழுதி வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் நிறைய பாடல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் மனைவியும், குழந்தையும் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அண்ணாமலை மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சென்னை கேஎம்சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பில் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். நாளை காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
அண்ணாமலைக்கு திருமணமாகி 19 வருடங்களுக்கு பிறகு மவுனா என்ற மகள் பிறந்தார். இப்போது அவருக்கு 4 வயதாகிறது.
சமீபத்தில் தான் கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்தார், அந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு பாடலாசிரியர் மரணம் அடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.