தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ராஜ்தாக்ரேயின் நவநிர்மான் சேனா மிரட்டல் விடுத்துள்ளது. இது இந்திய கலைஞர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் இதுகுறித்து அங்குள்ள நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது: இசைக்கு நாடு கிடையாது, மொழி கிடையாது, நேரம் கிடையாது, காலம் கிடையாது, எதுவுமே கிடையாது, இசை இசைதான். இசை எல்லைகளை கடந்தது அதற்கு எல்லைகளே கிடையாது என்றார். பாகிஸ்தான் கலைஞர்களை வெளியேற்றக்கூடாது என்ற கருத்தை தன் பாணியில் இப்படி கூறினார் இளையராஜா.
ரகுமான் கேள்விக்கு கடுப்பு : பின்னர் இளையராஜாவிடம் "ஏ.ஆர்.ரகுமானின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டபோது கோபமாக இளையராஜா அளித்த பதில்: இந்த கேள்விளை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். அதே கருத்துடன் நானும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்ககூடாது என்றார்.