மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாளத்தில் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மோகன்லால். அவருடைய படங்களும், அதில் அவருடைய நடிப்பும் இன்று வரை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது. மலையாளத்தில் மட்டுமல்லாது அவ்வப்போது மற்ற மொழிகளிலும் நடிப்பார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். விஜய்யுடன் 'ஜில்லா' படத்தில் தமிழில் நடித்தார். அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.
தெலுங்கில் அவர் நடித்த 'மனமன்தா, ஜனதா காரேஜ்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் 'மனமன்தா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தபோதும் அந்தப் படம் தோல்வியடைந்தது. 'ஜனதா காரேஜ்' படம் வசூலில் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது. இந்த இரண்டு படங்களின் கேரள உரிமைகளை வாங்கி மோகன்லால் வெளியிட்டுள்ளார். ஆனால், இரண்டு படமுமே கேரளாவில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதே சமயம் மோகன்லால் நடித்து செப்டம்பர் 8ம் வெளிவந்த மலையாளப் படமான 'ஒப்பம்' பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
மோகன்லாலின் ரசிகர்கள் அவருடைய நேரடிப் படங்களை ரசிக்கத் தயாராக இருக்கிறார்கள். அதே சமயம் அவருடைய மற்ற மொழிப் படங்கள் டப்பிங் ஆகி வந்தால் அதை வரவேற்க மறுக்கிறார்கள். 'ஜில்லா' படத்திற்கு மட்டும் கிடைத்த வரவேற்பிற்குக் காரணம் விஜய். அவருக்கு அங்கு தனி மார்க்கெட் உள்ளது. எனவே, இனி மற்ற மொழிப் படங்களில் நடிப்பதை விட மலையாளப் படத்தில் மட்டுமே நடிக்க மோகன்லால் முடிவெடுத்துள்ளாராம்.