வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்கா, வலியவன், புகழ், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என பல படங்கள் வெளியானபோதும், எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது சென்னை-28 பார்ட்-2, எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதில், சென்னை-28 பார்ட்டி-2 அவர் பெரிதாக எதிர்பார்த்த படம் என்றபோது, அதில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் தான் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் ஜெய். அதனால்தான் அந்த படத்தின் பிரஸ்மீட்டில்கூட அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
இந்த நிலையில், தற்போது கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் போன்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்து வரும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ஜெய். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியுள்ளதாம். அதனால் ஒருவேளை காதல் கைகொடுக்கவில்லையென்றாலும் காமெடி கைகொடுத்து தன்னை காப்பாற்றி விடும் என்று நம்பும் ஜெய், இந்த படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று கூடுதலாக மெனக்கெட்டு வருகிறாராம்.