600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்தியாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் நடிகர்களான பவாத்கான், மகிரான் ஆகியோர் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கூறியிருந்தது. மேலும் பா.ஜா., கட்சியினரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பவாத்கான் மற்றும் மகிராவிற்கு இயக்குநர் விக்ரம் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்பதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்து தான் வருகிறது, நிறையபேர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் நாமோ, கிரிக்கெட் வீரர்களையும், நடிகர்களையும் தடை செய்வதில் தான் குறியாக உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.