எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், ரகுல் ப்ரீத் சிங், பிரசன்னா மற்றும் பலர் நடிக்கும் 'துப்பறிவாளன்' படம் இன்று ஆரம்பமானது. இப்படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பே நடைபெற்றது. இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பமாவது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. விஷால் 'கத்திச் சண்டை' படத்தை முடித்தவுடன் 'துப்பறிவாளன்' படத்தை ஆரம்பிக்க முடிவு செய்திருந்தார். பத்து நாட்களுக்கு முன்பாக 'கத்திச் சண்டை' படப்பிடிப்பும் முடிவடைந்தது. அடுத்த மாதம் தீபாவளிக்கு 'கத்திச் சண்டை' படம் வெளியாக உள்ளது.
மிஷ்கின் கடைசியாக 'பிசாசு' படத்தை இயக்கினார். அந்தப் படம் சுமாராக ஓடியது. சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலை வைத்து இந்தப் படத்தை ஆரம்பிக்கிறார். வித்தியாசமான கூட்டணி, விறுவிறுப்பான படத்தைத் தரட்டும்.
“துப்பறிவாளன், மிஷ்கின் சார் இயக்கத்தில் என்னுடைய அடுத்த சொந்தத் தயாரிப்பை ஆரம்பித்துவிட்டேன். உற்சாகமான ஒரு விஷயம், உங்கள் அனைவரின் வாழ்த்துகள் வேண்டும்,” என விஷால் கூறியுள்ளார்.
இப்படத்திற்காக விஷால் உட்பட படத்தில் நடிக்கும் அனைவரும் கடந்த பத்து நாட்களாகவே நடிப்புப் பயிற்சியையும் எடுத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.