இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஹீரோயின்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதென்றால் அவ்வளவுதான். அதன் பின் அவர்களை யாரும் ஹீரோயினாக நடிக்க அழைக்க மாட்டார்கள். அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. அதனால் சிலர் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விடுவார்கள். சிலர் சின்னத்திரை பக்கம் போய்விடுவார்கள். சிலர் பரவாயில்லை என மனதைத் தேற்றிக் கொண்டு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
தமிழ்த் திரையுலகில் 80களின் கடைசியிலும் 90களிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் குஷ்பு. அவருக்கென அப்போது பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் புகழ் பெற்றவர் குஷ்பு.
இயக்குனர் சுந்தர்.சி யைத் திருமணம் செய்து கொண்ட நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். அதன் பின் சின்னத் திரையில் நிகழ்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்தார், படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். 2011ல் வெளிவந்த 'இளைஞன்' படத்திற்குப் பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடிக்கவில்லை. சில 'கேமியோ' கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார். தற்போது சுமார் 5 வருடம் கழித்து புதிய படம் ஒன்றில் நடிக்க சம்மதித்துள்ளார்.
இந்தப் படத்தை 'சுப்பிரமணியபுரம்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, கடந்த வருடத்தில் 'வானவில் வாழ்க்கை' என்ற படம் மூலம் இயக்குனரான ஜேம்ஸ் வசந்தன் இயக்குகிறார். இப்படத்தில் ராதிகா, சுஹாசினி, ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம் நடக்க உள்ளது. இதற்காக அனைவரும் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.
“6 வருடங்கள் கழித்து ஒரு படத்தில் நடிக்க வருவது பள்ளிக்கு முதல் நாள் செல்வது போல் இருக்கிறது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு. குறிப்பாக சிறந்த நடிகைகளான ராதிகா, சுஹாசினி, ஊர்வசி ஆகியோருடன் நடிப்பதும் கூடத்தான்,” எனக் குஷ்பு கூறியுள்ளார்.