மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று நடிகர்கள் கேட்டுக் கொண்டபோதும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. தங்களது அபிமான ஹீரோக்களின் படங்கள் தியேட்டர்களுக்கு வரும்போது சந்தோசத்தை வெளிப்படுத்த கட்அவுட், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபகாலமாக தனுஷின் ரசிகர்கள் அவரது படங்களில் ஆடியோ விழாக்களுக்கு படையெடுத்து, அவர் பேசும்போது பலத்த கரகோஷம் எழுப்பி வருபவர்கள், அவரது படங்கள் ரிலீசாகும்போதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் விமரிசையாக தொடரி படத்தின் ரிலீசை கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள், திரையில் தனுஷ் தோன்றும் ஓப்பனிங் காட்சிகளின்போது உணர்ச்சி பெருக்கில் ஆட்டம் போட்டவர்கள், திரையில் தோன்றும் தனுஷை நோக்கி பாலை ஊற்றி விட்டார்களாம். இதன்காரணமாக, 6 லட்சம் மதிப்பிலான தியேட்டரின் திரை வீணாகி விட்டதாம். இந்ததகவலை, அந்த தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் கெளதமன் தனது டுவிட்டரில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.