கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று நடிகர்கள் கேட்டுக் கொண்டபோதும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. தங்களது அபிமான ஹீரோக்களின் படங்கள் தியேட்டர்களுக்கு வரும்போது சந்தோசத்தை வெளிப்படுத்த கட்அவுட், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபகாலமாக தனுஷின் ரசிகர்கள் அவரது படங்களில் ஆடியோ விழாக்களுக்கு படையெடுத்து, அவர் பேசும்போது பலத்த கரகோஷம் எழுப்பி வருபவர்கள், அவரது படங்கள் ரிலீசாகும்போதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் விமரிசையாக தொடரி படத்தின் ரிலீசை கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள், திரையில் தனுஷ் தோன்றும் ஓப்பனிங் காட்சிகளின்போது உணர்ச்சி பெருக்கில் ஆட்டம் போட்டவர்கள், திரையில் தோன்றும் தனுஷை நோக்கி பாலை ஊற்றி விட்டார்களாம். இதன்காரணமாக, 6 லட்சம் மதிப்பிலான தியேட்டரின் திரை வீணாகி விட்டதாம். இந்ததகவலை, அந்த தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் கெளதமன் தனது டுவிட்டரில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.