தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவர் காளிதாஸ். நடிகர் ஜெயராமின் வாரிசான இவர் தமிழில் ஒரு பக்க கதை என்ற படத்தில்தான் முதலில் கமிட்டாகி நடித்து வந்தார். அந்த படத்தை விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கினார். ஆனால், என்ன காரணமோ அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதற்கிடையே தற்போது மீன்குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்காளிதாஸ். அப்படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும், காளிதாஸின் தந்தை ஜெயராமும், கமலும் நண்பர்கள் என்பதால், கமல்தான் ஒரு பக்க கதை படத்தின் பூஜையின்போது மீடியாக்களுக்கு காளிதாஸை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், தற்போது காளிதாஸ் நடித் துள்ள மீன்குழம்பும் மண்பானையும் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித் துள்ளார் கமல்.
இதுபற்றி காளிதாஸ் ஜெயராம் கூறுகையில், இந்த படத்தில் நடிக்க கமல் சாரை ராம்குமார் சார் கேட்டபோது, எந்த யோசனையும் இன்றி எப்போது படப்பிடிப்பு என்று சொல்லுங்கள் வந்து நடிக்கிறேன் என்றார். அதையடுத்து அவர் நடிக்க வரவேண்டியநாள் வந்ததும், எனக்கும் அவருடன் காட்சி இருந்ததால் மிகுந்த சந்தோசமாகி விட்டேன். அதனால் படப்பிடிப்புக்கு முந்தின நாள் ராத்திரி முழுக்க எனக்கு தூக்கமே இல்லை. அடுத்தநாள், சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் ஸ்பாட்டுக்கு சென்று நடித்தேன். கமல் சார் பெரிய நடிகர் என்றபோதும், அவர் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார். அந்த அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்கிறார் காளிதாஸ் ஜெயராம்.