பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பிரபல மலையாள இயக்குனர் சித்திக், கடந்த வருடம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை இயக்கியதை தொடர்ந்து இந்த வருடம் தனது நண்பர் லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு கதை மட்டும் எழுதிக்கொடுத்தார்.. இப்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சித்திக். ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்திற்கு 'ஃபக்ரி' என டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக 'பிசாசு' நாயகி பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார்.
'பிசாசு' படத்தில் ஒரு காட்சியை தவிர படம் முழுவதும் தனது ஒரிஜினல் முகத்தையே காட்டாமல் நம்மை மிரட்டிய பிரயாகா, தற்போது மலையாளத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த 'ஒருமுறை வந்து பார்த்தாயா' படம் வெளியானது. அடுத்ததாக 'ஒரேமுகம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுவரை சின்னச்சின்ன படங்களில் நடித்துவந்த பிரயாகாவுக்கு சித்திக்கின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், தான் எப்படியும் ஒரு முன்னணி நடிகையாகி விடுவோம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் பிரயாகா..