தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள இயக்குனர் சித்திக், கடந்த வருடம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை இயக்கியதை தொடர்ந்து இந்த வருடம் தனது நண்பர் லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு கதை மட்டும் எழுதிக்கொடுத்தார்.. இப்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சித்திக். ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்திற்கு 'ஃபக்ரி' என டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக 'பிசாசு' நாயகி பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார்.
'பிசாசு' படத்தில் ஒரு காட்சியை தவிர படம் முழுவதும் தனது ஒரிஜினல் முகத்தையே காட்டாமல் நம்மை மிரட்டிய பிரயாகா, தற்போது மலையாளத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த 'ஒருமுறை வந்து பார்த்தாயா' படம் வெளியானது. அடுத்ததாக 'ஒரேமுகம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுவரை சின்னச்சின்ன படங்களில் நடித்துவந்த பிரயாகாவுக்கு சித்திக்கின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், தான் எப்படியும் ஒரு முன்னணி நடிகையாகி விடுவோம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் பிரயாகா..