கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
முப்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்துவிட்டு அடுத்ததாக மெயின் விஷயத்துக்கு போகலாம். சரியாக 1986ஆம் வருடம்.. மலையாளத்தில் மம்முட்டி நடித்த படங்கள் தொடர்ந்து அடிவாங்கி கொண்டிருந்த நேரம் அது.. இனி அவர் அவ்வளவுதான் என்றும், ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க விரும்பவில்லை என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்தன. அதற்கேற்றவாறு இயக்குனர்களும் மம்முட்டியை ஒதுக்க ஆரம்பித்தனர். அந்த சமயத்தில், தான் இயக்கிய 'நியூடெல்லி' படத்தின் கதாநாயகனாக பலரின் எதிர்ப்பையும் மீறி, மம்முட்டியை ஒப்பந்தம் செய்தார் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி..
1987ல் வெளியான அந்தப்படம் இமாலய வெற்றி பெறவே மம்முட்டி மீண்டும் பார்முக்கு வந்தார். முன்னணி ஹீரோவாக மாறினார். மம்முட்டியின் சினிமா வாழ்க்கையை நியூடெல்லிக்கு முன், நியூடெல்லிக்குப்பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு மம்முட்டியின் வாழ்க்கையில் அந்தப்படம் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது.. ஒகே இப்போதைய செய்திக்கு வருவோம்... அந்த சமயத்தில் மம்முட்டிக்கு வாழ்வுதந்த இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. கடைசியாக மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன.
வயதாகிவிட்டது, அதனால் பார்மை இழந்து விட்டார் என தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் நம்பர் ஒன்னாக விளங்கும் 65 வயதான ஜோஷி, இன்றைய டெக்னாலஜியுடன் அப்டேட்டில் இருப்பவர்.. ஆனால் நேரம் அவரை சரிவில் தள்ளியிருக்கிறது.. அதனால் இப்போது அவருக்கு கைகொடுக்கும் விதமாக அவரது டைரக்சனில் நடிக்க மம்முட்டி ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த புதிய படம் நியூ டெல்லியைப்போல இருவர் வாழ்க்கையிலும் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்..