பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
முப்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்துவிட்டு அடுத்ததாக மெயின் விஷயத்துக்கு போகலாம். சரியாக 1986ஆம் வருடம்.. மலையாளத்தில் மம்முட்டி நடித்த படங்கள் தொடர்ந்து அடிவாங்கி கொண்டிருந்த நேரம் அது.. இனி அவர் அவ்வளவுதான் என்றும், ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க விரும்பவில்லை என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்தன. அதற்கேற்றவாறு இயக்குனர்களும் மம்முட்டியை ஒதுக்க ஆரம்பித்தனர். அந்த சமயத்தில், தான் இயக்கிய 'நியூடெல்லி' படத்தின் கதாநாயகனாக பலரின் எதிர்ப்பையும் மீறி, மம்முட்டியை ஒப்பந்தம் செய்தார் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி..
1987ல் வெளியான அந்தப்படம் இமாலய வெற்றி பெறவே மம்முட்டி மீண்டும் பார்முக்கு வந்தார். முன்னணி ஹீரோவாக மாறினார். மம்முட்டியின் சினிமா வாழ்க்கையை நியூடெல்லிக்கு முன், நியூடெல்லிக்குப்பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு மம்முட்டியின் வாழ்க்கையில் அந்தப்படம் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது.. ஒகே இப்போதைய செய்திக்கு வருவோம்... அந்த சமயத்தில் மம்முட்டிக்கு வாழ்வுதந்த இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. கடைசியாக மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன.
வயதாகிவிட்டது, அதனால் பார்மை இழந்து விட்டார் என தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் நம்பர் ஒன்னாக விளங்கும் 65 வயதான ஜோஷி, இன்றைய டெக்னாலஜியுடன் அப்டேட்டில் இருப்பவர்.. ஆனால் நேரம் அவரை சரிவில் தள்ளியிருக்கிறது.. அதனால் இப்போது அவருக்கு கைகொடுக்கும் விதமாக அவரது டைரக்சனில் நடிக்க மம்முட்டி ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த புதிய படம் நியூ டெல்லியைப்போல இருவர் வாழ்க்கையிலும் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்..