அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
10க்கும் மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சவுந்தர்ராஜா. கவுண்டமணி ஹீரோவாக நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் ரித்விகா ஜோடியாக நடித்தார். தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதி தம்பியாக நடித்தார். தற்போது கள்ளன் படத்தில் நடித்து வருகிறார். ஒரு கனவு போல படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மணிரத்னம் சார் இயக்கிய இருவர் படத்தில் அட்மாஸ்மியர் ஆர்ட்டிஸ்டாக நடித்தேன். அதன் பிறகு சுப்பிரமணியபுரம், சுந்தர பாண்டியன் உள்பட பல படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தேன். தர்மதுரை படமும், எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படம் ஒரு அடையாளத்தை கொடுத்தது. தற்போது கள்ளன் படத்தில் முக்கியமான 4 திருடர்களில் ஒருவராக நடித்துள்ளேன்.
ஒரு கனவு போல படத்தின் மூலமாக ஹீரோவாகியிருக்கிறேன். இது கே.பாக்யராஜ் சார், ஸ்ரீதர் சார் படங்கள் மாதிரியான உளவியல் ரீதியான பிரச்சினைகளை பேசுகிற படம். கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் விஜயசங்கர் சார். படத்தில் என் கேரக்டர், கள்ளனா? காதலனா? என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்லமுடியாது.
இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குனர் சந்திரா அக்காவின் “கள்ளன்” படம் நிருபிக்கும். “ஒரு கனவு போல”, “கள்ளன்” இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும். ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி, என்னை ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்க அழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் நடிப்பேன்.