சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் எஸ்.பி.முத்துராமனுக்கு நிகர் யாரும் கிடையாது. நேற்று நடந்த காகித கப்பல் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் வெற்றிமாறனை புகழ்ந்து பேசியதுடன் விசாரணை படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழ் சினிமா உலக அளவில் உயரும். விருது கிடைக்க நாம் பிரார்த்தனை செய்வோம் என்றார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: நான் 70 படம் இயக்கி இருக்கிறேன். அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. என்னுடைய குழு. என்னுடைய 70 படத்திலும் ஒரே டெக்னீஷயன்கள் பணியாற்றினார்கள். இப்போது வரும் இளைஞர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். வெற்றிமாறன் போன்றவர்கள் வித்தியாசமான படத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார்கள். அதனால்தான் இப்போது வெற்றி மாறன் ஆஸ்கரின் கதவுகளை தட்டியிருக்கிறார்.
விசாரணை ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருப்பது அந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். விசாரணை ஆஸ்கர் விருதை பெற்றால் தமிழ் சினிமா உலக தரத்திற்கு உயரும். அதற்கு நிறைய போட்டிகள் இருக்கிறது. உலகம் முழுழுவதும் இருந்து படங்கள் வரும். அதையெல்லாம் தாண்டி விசாரணை விருதை பெற நாம் ஆண்டவனை பிரார்த்திப்போம். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்போம். நல்லதே நடக்கும். என்றார்.