'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வக்குமார் தயாரித்து வரும் படம் சர்வர் சுந்தர். சந்தானம், மராட்டிய நடிகை வைபவி ஷந்திலியா நடித்து வருகிறார்கள். புதுமுகம் ஆனந்த் பால்கி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
சர்வர் சுந்தரத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கோவாவில் நடந்தது. 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதன் கிளைமாக்ஸ் படப்பிடிப்புகள் துபாயில் நடக்கிறது. ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. இரண்டையும் துபாயில் படமாக்க திட்டமிட்டனர். இதற்காக படக் குழுவினர் துபாய் சென்றுள்ளனர். துபாயில் 12 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடக்க இருக்கிறது.